Book Title: குறும்புக் கவிதைகள்
Book Description: ஒரு புள்ளியில் குவியும் ஒளிக்கதிரின்வெப்ப சக்தியைஓராயிரம் அளவு பெருக்கிஅளிக்க வல்லது கவிதை.சிறு உளியாய் மலையையே பிளக்கும் வல்லமை கொண்டது கவிதை .சிறு திரி தூண்டினால் மிகப்பெரிய வெளிச்சத்தை அளிக்கும் விளக்கு போன்றவல்லமை கொண்டது கவிதை. மனமென்னும் மீன்களைப் பிடிக்கும் கவர்ச்சியான தூண்டில் கவிதை.ஒரு சிறு அணுவைப் பலஆயிரம் அணுக்களாகப் பிரித்து அதன் உள்ளே ஆழ்ந்து சென்று பார்த்தாலும் அங்கேயும் இருக்கும் ப்ரபஞ்ச சக்திதான் கவிதை. கவிஞர்களே குறும்புத்தனம் கொண்டவர்கள்தான் ஆனால் அவர்கள் குறும்பு குழந்தையின் குறும்புகுழந்தைகள் உலகுக்கே நுணுக்கம் நிறைந்த செய்திகளை உணர்த்தும் மலர்கள் . குழந்தையும் தெய்வமும் ஒன்று . - தமிழ்த்தேனீ -
Contents
Book Information
Book Description
சில வரிகளில் நுணுக்கமான ஆழமானகருத்துள்ள கருத்துக்களை சொல்லுதல் ஒரு கலை.ஒரு சிறிய கருவை பெருங் கவிதையாகவும் மரபுக் கவிதை யாகவும் சிறு கவிதையாகவும் குறுங் கவிதையாகவும் பலவடிவங்களில் எழுதலாம். படிப்பவருக்கு உடனடியாகப் புரியும் வண்ணம் எழுதுதல் திறமை.அது போல இந்தக் கவிதை களில் மிக ஆழமான கருத்துக்கள் மிக எளிமையான தமிழ்ச் சொற்களைக் கொண்டு விதைக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளின் ஆழம் அளவிடமுடியாதது . அறிவோம் தமிழின் சிறப்பை . இது குறுங் கவிதைகளின் கருப்பை.
-தமிழ்த்தேனீ
License
குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.