சில வரிகளில் நுணுக்கமான ஆழமானகருத்துள்ள கருத்துக்களை சொல்லுதல் ஒரு கலை.ஒரு சிறிய கருவை பெருங் கவிதையாகவும் மரபுக் கவிதையாகவும் சிறு கவிதையாகவும் குறுங்கவிதையாகவும் குறும்புக் கவிதைகளாகவும் பலவடிவங்களில் எழுதலாம். படிப்பவருக்கு உடனடியாகப் புரியும் வண்ணம் எழுதுதல் திறமை.அது போல இந்தக் கவிதைகளில் மிக ஆழமான கருத்துக்கள் மிக எளிமையான தமிழ்ச் சொற்களைக் கொண்டு விதைக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளின் ஆழம் அளவிடமுடியாதது . அறிவோம் தமிழின் சிறப்பை . இது குறுங் கவிதைகளின் கருப்பை .
என் தந்தையார் ஆர் ரங்கஸ்வாமி அவர்களுக்கும் என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்களுக்கும் இந்த
“குறும்புக் கவிதைகள் ” எனும் படைப்பை காணிக்கையாக்குகிறேன். – தமிழ்த்தேனீ