3

ஊழல்

ஊழல்  பட்டியலில் இந்தியாவுக்கு

88 வது இடமா அதிலும் முதல் இடம் இல்லையா? 

கனவு

செத்துப் போனேன்  பயந்து விழித்தேன்

நல்ல வேளை கனவுதான்  நிம்மதியாய்க்

  கண்களை மூடினேன்.

முடியாது

என்னால் முடியாதென்று

சொல்லிவிடத்தான்

நினைக்கிறேன்

என்னால் முடியவில்லை 

நல்ல வேளை

இலையுதிர் காலமும் பூவுதிர்காலமும்

பழமுதிர்க் காலமும் இயற்கைதான்

நல்ல வேளை பூசணி கொடியில் காய்க்கிறது

ஏக்கம் 

ஒரு புகைப் படத்திலும்

உன் அருகில் நான் இல்லையே

ஓ என்றுமே  நான்

புகைப்படக்காரன்தான்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book