7
நீதி தேவதை
நீதிபதி தர்மலிங்கம்
நீதிபதி தர்மலிங்கம்
நீதிபதி தர்மலிங்கம்
நீதிமன்ற டவாலி மூன்று
முறை கூப்பிட்டார்
குற்றவாளிக் கூண்டில்
நீதிபதி தர்மலிங்கம்
பொட்டு
என் மனைவி சுமங்கலிதான்
நானும் உயிரோடு இருக்கிறேன்
நிலைக் கண்ணாடியிலும்
குளியலறைக் கதவுகளிலும்
இருக்கும் ஒட்டும் நெற்றிப்
பொட்டு நினைவு படுத்துகிறது
வேலைக்காரி
அக்கறையாய்ப் பார்த்துப் பார்த்துச்
சமைத்தாயிற்று நல்லவேளை
வேலைக்காரிக்கு பிடித்த
உணவு வகைகள் மீதமானலும்
கவலை இல்லை
போதை
தண்ணி அடிச்சு தண்ணி
விலகாது நல்ல பழமொழி
தண்ணி அடிச்சா எல்லாமே
விலகிடும் அதுதான் சுனாமி
தண்ணி அடிக்காதீங்க
பாசம்
பெற்றவர் மேல் பாசமாய்
இருப்பதே தகுதியாய்
காதலித்தாள் பின்
அதே காரணமாய்
தனிக் குடித்தனம்
நாகரீகம்
சிந்து நதிக்கரை நாகரீகம்
காலமாற்றமடைந்தனால்
கூவம் நதிக் கரையில்
கொசுக்களுடன் வாழுகிறோம்