10

பிரும்மா 

ஆணினத்தைக் கொல்ல

ஒரு படைப்பு

பெண்ணினத்தைக் கொல்ல

ஒரு படைப்பு

ஆண்கடவுளும்  பெண்கடவுளும்

இணைந்து  படைத்தார்

ஒரு ஆண்  ஒரு பெண்

ஒரு ஆணினம்  ஒரு பெண்ணினம்

இரு படைப்புகளும் விடைத்தன

புடைத்தன  காதலித்தன

மணந்தன புணர்ந்தன படைத்தன

மீண்டும் இரு படைப்புகள் 

ஏன் 

சமாதானப்  புறாக்களுக்கு

சண்டை  உண்டு

பருந்துகளுக்கு பாசம் உண்டு

கழுகுகளுக்கு நேசம் உண்டு

புலிகளுக்கு  கருணை உண்டு

பாம்புகளுக்கு இணக்கம் உண்டு

நரிகளுக்கு  நியாயம்  உண்டு

நாய்களுக்கும்  இரக்கம்  உண்டு

இந்த  மனிதர்களுக்கு

இடையே மட்டும்  ஏன் ? 

வாலி

யாரெதிர் வந்தாலும் பாதி பலம் வாங்கும்

பார் புகழ் கவிஞன்  ஶ்ரீரங்கத்து வாலி

நேர் எதிர்  மனிதரையும்  நேயத்தோடணுகி

சீர் மிகு சொற்களால்  மனம் இளக்கி பாவுலகுத்

தேர் ஏறி நின்றான்  திருமால் அரங்கன்

தன் பாதம் தன்னில்  நேராக சென்றடைந்தான்

அவர் புகழ் வாழ  அடியேனும் தொழுகின்றேன்

அரங்கமா நகருளானை  அன்பாய்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book