11

கடிவாளம்

காற்று நிரப்பப்பட்ட பலூன்கள்

பறப்பதற்கு ஆயத்தமாய்

பறக்கும் வான வெளியில்

பலரின் கற்பனை சிறகுகளாய்

எங்கு போய் இறங்குமோ  இலக்கு

பலூனுக்குத் தெரியாது அதன்

கடிவாளம் யார் கையில்

ஒற்றைச்சொல்

திறந்த கதவு

ஜன்னலில் துணி

வரவேற்பு மிதியடி

தயாராய் செய்தித்தாள்

உதிர்ந்த காலணி

வயோதிகம் தாங்காத

வெற்று நாற்காலி

கறை படிந்த தரை

யாரும் வர விரும்பாத அறை

கனத்த நெஞ்சம்  காரணம்

அந்த ஒற்றைச் சொல்

வறுமை 

உள்ளங்கையில் பட்டுத் தெறித்து

உள்ளொளி பெற்று ஒளியாய்ப்

பொறிந்து வெண்மை ஒளியாய்ச்

சிதறி எழுந்து நான் உள்ளே

வந்தால் முழுதும் நிரம்பிய

அணைக்கட்டும் உடைந்தே

தெறிக்கும் என்றே உணர்த்தும்

ஒரு துளி தண்ணீர் அது

வெள்ளை உள்ளம் கொண்டே

வாழுகின்ற ஏழையின் கண்ணீர்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book