14

காதல்

நீ யாரென்று உண்மையைச் சொல்

நான் யாரென்று உணர்ந்து கொள்

நாம் பேசிக் காதலித்து மணக்கலாம்

பிறகுதான் வாழ்க்கை இனிக்கும்

உயர்வு

செருப்பு தைக்கலாம் செஞ்சாந்து பூசலாம்

பொருப்புணர்ந்து நெருப்பின் அனலில்

வெந்து சமைக்கலாம்  மனிதம் வளர்க்கலாம்

செய்தொழிலில் இல்லை உயர்வு !

செய்தொழில்

பொய்யும்​ புரட்டும்​ ​ புனைசுருட்டும்​ ​ தருகின்ற

​செல்வம் ​ சேர்த்து  மகிழ்வாய் வாழுகின்றார்

உழைப்போரைப் பார்த்து  எள்ளி நகையாடுகின்றார்

​செய்தொழிலில் இல்லை உயர்வு !

சூழ்வெளி

சூழ்நிலை வெப்பத்தால் ஆழ்கடல் பொங்கிப்

புரண்டு சீறி அழிக்கும் பெருமலையும் உருகியே

சூழ்ந்தே அழிக்கும் போவதெங்கே பூவை விட்டு

சூழ்வெளியைச் சுத்தமாய் வை !

கண்ணியம்

கண்டவுடன் காதலால் காமமேறும் போதிலும்

தீண்டிவிடும் நாகத்தின் விஷமேறும் போதிலும்

தாண்டிவிடு மனதடக்கி அவள்தானே  சக்தியே

பெண்டிரைக் கண்ணியமாய்ப் பேண்

முதிர்ச்சி

தத்து பித்தென்று உளரித் திரிவோரும்

பித்து பிடித்தாற் போல் மயங்கி யலைவோரும்

பித்தரில்லை பேயரில்லை சித்தராயும் இருப்பர்

முதிர்ந்தே பழுத்த பழமாய்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book