16

காசுமலர்

காசுமரம் காசுச்செடி காசுக்கொடி காசுக்காய்

காசுப்பழம் காசு விதை  காணவே – முடியவில்லை

கள்ள நோட்டும் அடிக்கவில்லை அப்படியும்

காசுமலர் நாளும் பிறப்பு

ஆரோக்கியம்

பிஸ்ஸாவும் பர்கரும் வெளிநாட்டுச் சாக்லெட்டும்

தப்பாமல்  பெறுவார்   கர்ப்பிணியும்  தப்பாதே

மூப்பும் உடல்  பருமன்   முழுவீச்சில்

செப்பாமல்  நான் செய்ய

சுகப்ரசவம்

சிசேரியன் வேண்டாம் சுகமாய் பிரசவம்

வைத்தியர் சொன்னாலும் ஏழரை ஒன்பது

ராகுகாலம் வேண்டாத தெய்வமில்லை ஒன்பது

மணிக்கு மேல் பிறக்க வேண்டி வலி

கண்டேன் காலைமணி ஏழரை

கடவுள்

யேசுவிடம் தூங்காமல் விழித்திடும்  நிர்வாணம் கடவுளென்றார் புத்தன் என்றேன் உருவமில்லா வெட்ட வெளிதான் கடவுள் என்றார் அல்லா என்றேன் புத்தனிடம்  எல்லையில்லாப் ப்ரபஞ்சம் அத்தனையும்அணுக்கி நுணுக்கி அணுவிலே வைத்திருக்கிறேன்என்றேன் ஆதிமூலத்திடம் கடவுளர் ஒற்றுமையாய்விருந்தினர்  விசா முடிந்ததும் கிளம்பு என்கிறார்

பருவம்

கடலலை மேலே ஒரு   பாவை

உடலை மறைக்க ஆடை  தேவை

பாவையின் உடலை தழுவும் அலை

கலைஞனின் கண்ணுக்கு காவியம்,

இளைஞனின் கண்ணுக்கு இளமைக் காவியம்

அலை முழுதும் வடியாதென்ற நம்பிக்கை

இயற்கை மாறினாலும் மாறாத  வளைக்கை

காப்பாற்ற காதலன் வருவானோ

களவாட காமுகன் வருவானோ

காலம் தான் சொல்லும் பதில்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

குறும்புக் கவிதைகள் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book