13
காதல் தேவன்
இரு பால் இனங்க ளிரண்டையும்
இல்லற நுகத்தடியில் பூட்டி
உல்லாசத் தேர்ப் பயணம்
செய்கிறான் மன்மதன்
ஒரு பால்,ஒருகால் மிரண்டாலும்
பயணம் தடம் மாறும்,தடுமாறும்,
தடம் மாறும் பயணங்களை
இலக்கு தப்பா மன்மத பாணம்
தொடுத்து ,காதல் கடிவாளம்
தனை இழுத்து சீராக்கி
ஓடவைக்கிறான் மன்மதன்
காமதேவன் அல்ல காதல் தேவன்
விடுமுறை
பள்ளியில் படிக்கும் போதும்
வேலை செய்த நாட்களிலும்
விடுமுறை எனும் வார்த்தை
செய்த மாயம் எத்தனையோ
விடுமுறை ஆசை அதிகமாக
முற்றிப் போன நிலையில்
விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டேன்
விடுமுறை இப்போது தண்டனையாய்
வெண்பாக் கவிதைகள்
கணினி
அணிமா முதல் அட்டமா சித்திகளும்
பிணியிலாப் பெருவாழ்வும் கிட்டும்
கணிணி கையடக்கி உலகுமேய விரல்
நுனிக் கணியெலி இன்றுண்டு காண்
தந்தை
முந்தைப் பிறப்பின் முழுப்பயனாய் இப்புவியில்
எந்தைப் புதல்வனாய் இங்குதித்தேன் – விந்தையே
சிந்தனை மேம்படச் செந்நெறி போதிப்ப(து)
எந்தந்தை காட்டும் வழி.
காசு
வீசிடும் காற்றும் மழையும் இயற்கையாய்
பேசிடும் மனிதர் காசுக்கு விற்கிறார்
மனிதரின் ஆசைக்கு தெய்வமும் தோற்குமா
காசினியில் எல்லாமே காசு.