குறும்புக் கவிதைகள் 1
வசியம்
வார்த்தைகளில் தேன் தடவும் வசியம்
வாழ்க்கைக்கு என்றும் அவசியம்
ஞானம்
தியானத்தில் ஆழ்ந்தும்
மூழ்காமல் மிதப்பவனே ஞானி
கணவன்
ஒரு வேளை இவன்தானோ
இது பதினெட்டாவது முறை
நான்
உன்னை ஓட விட்டு உன் பின்னால்
நீ ஓடு உன்னை நீ உணர்வாய்
எச்சரிக்கை
நிழல் மட்டுமல்ல கிளையும் விழும்
மரம் மட்டுமல்ல மனமும் முறியும்
தமிழ்
செந்தமிழ் வளர்க்க தொலைக் காட்சி
ஆங்கிலத்தில் சூரியன்
தூது
இதயத்தின் காதலை இதழால் தூது விட்டேன்
கைகளால் தாங்குகிறாள் இதயத்தை
கொசு
இனிமையாய் காதருகில் ரீங்காரம்
“ இனிய இரவு “
கிசுகிசுத்தது ஒரு பெண் குரல்